Thursday 2nd of May 2024 09:21:30 AM GMT

LANGUAGE - TAMIL
-
யாழ்.பல்கலை பரிசோதனைக்கூடம்; பூநகரியில் ஒரே குடும்பத்தவர்கள் மூவருக்கு கொரோனா!

யாழ்.பல்கலை பரிசோதனைக்கூடம்; பூநகரியில் ஒரே குடும்பத்தவர்கள் மூவருக்கு கொரோனா!


யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் ஐவருக்கு கொரோானாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் எமக்குத் தெரிவித்தார்.

அவர்களில் கொழும்பிலிருந்து வந்து பூநகரியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர், யாழ். பல்கலைக்கழகத்தில் கற்பதற்காக பதுளையிலிருந்து வந்து நல்லூரில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மாணவி ஒருவர், சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட ஒருவர் என ஐவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று யாழ்.பல்கலைக்கழக ஆய்வு கூடத்தில் 276 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக கேதீஸ்வரன் தெரிவித்தார்.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE